<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23099999</id><updated>2011-04-21T11:22:36.275-07:00</updated><title type='text'>தூறல்</title><subtitle type='html'>தூறல்......இந்த உலகிலிருந்து விடுதலை.... என் உலகிற்கு..... எப்போதும் புதிதாய்.... இனிமையாய் இருக்கும் மழையின் தூறலைப் போல.... இருக்கும் எனக்கே எனக்கான உலகிற்கு செல்லும் ஒரு முயற்சி!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-115289661887021647</id><published>2006-07-14T09:54:00.000-07:00</published><updated>2006-07-14T10:05:47.673-07:00</updated><title type='text'>கவித்தூரிகை 3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/dog.0.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/dog.0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;

                                                &lt;span style="font-size:130%;"&gt; &lt;span style="font-weight: bold;"&gt;                 
            கடவுளை சந்தித்த கதை


&lt;span style="font-size:85%;"&gt;    மல்லிகைப் பந்தலிலிருந்து ஒரு
    மல்லிகை உதிர்வது போல
    உலகில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல்
    இறந்து போனாள்
    எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தி.

    அவள் இறப்பின் அநியாயம்
    எங்கள் தூக்கத்தைக் கெடுத்ததால்
    கடவுளிடம் முறையிட முடிவு செய்தோம்.
    அவளின் பெற்றோரை அழைத்துச்சென்றோம்.

    அவளின் தாய் கடவுளிடம் காட்ட
    தன்னோடு நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டாள்.
    இறந்துபோனவள் வென்ற பரிசுக்கோப்பைகள்
    சான்றிதழ்கள் அவள் எழுதிய கவிதை
    அவள் பாதி பின்னிய ரோஸ் நிற ஸ்வெட்டர் இன்னும் பல.

    எங்களோடு பிடிவாதமாய் வந்தது
    அவள் வளர்த்த நாய்.
    நண்பர்கள் ஆசிரியர்கள் பக்கத்து வீட்டார்
    என எல்லோரும் சென்றோம்.

    கடவுளின் வீட்டை அடைவதற்குள்
    பார்வை நேரம் முடிந்திருந்தது.
    காவலாளிக்கு ஐந்து ரூபாய் தந்து
    உள்ளே சென்றோம்.
    கடவுள் உணவருந்திக்கொண்டிருந்தார்.

    நிலைமையின் அவசரம் கருதி
    நான் பேசத்தொடங்கினேன்.
    நான் பேசப்பேச அந்தத் தாய் அழத்தொடங்கினாள்.
    கடவுளின் மனைவி உச்சுக்கொட்டினாள்.

    அவள் செய்த நல்லவை
    அவளின் குணம் எல்லாம் சொன்னேன்.
    திடீரென குரல் உயர்த்தி அவளை
    சாகடித்தது என்ன நியாயம் என்று கேட்டேன்.

    கடவுள் நிமிர்ந்து பார்த்தார்.
    நடந்தவை நடந்தவையே என்றார்.
    நியாயம் கேட்டல் தன் சபையில் இல்லை என்றார்.
    அவளின் காலம் முடிந்தது என்றார்.
    இது அவளின் பெற்றோர் செய்த பாவத்தின் பலன் என்றார்.
    நீங்கள் போகலாம் என்றார்.

    இறந்தவளின் காதலன் கதறத் தொடங்கினான்.
    நண்பர்கள் எல்லோரும் விசும்பினர்.
    அந்தப் பெற்றோருக்கு இதை விட
    கொடிய தண்டனை ஏதும் இல்லை என்றேன்.
    ஒரு உயிரை தண்டிக்க இன்னொரு
    உயிரை எடுத்தல் நியாயமில்லை என்றேன்.
    கடவுள் என்னை முறைத்தார்.
    காவலாளியை அழைத்து எங்களை
    வெளியேற்றச் சொன்னார்.

    எதிர்த்து பேச எங்களுக்கு தைரியமில்லை.
    எல்லோரும் செய்வதறியாது நின்றோம்.
    கடவுள் உள்ளே செல்ல எத்தனித்தார்.
    அப்போது குரைக்கத் தொடங்கியது
    அவளின் நாய்.

    அனைவரும் அதிர்ச்சியில் அதைப் பார்த்தோம்.
    அது வெறிப்பிடித்தது போல குரைத்தது.
    விடாமல் குரைத்தபடி
    அங்கேயே செத்து விழுந்தது.

    அடர்ந்த ஒரு மௌனம்
    அங்கே படர்ந்தது.
    சிறிது நேரம் நாயைப் பார்த்த
    கடவுள் மெதுவாக உள்ளே சென்றார்.

    விடைதெரியாத ஒரு புதிரோடு
    நாயைத் தூக்கிக்கொண்டு
    அனைவரும் வெளியேறினோம்
    அங்கே இன்னொரு கும்பல்
    அழுதபடி நின்றிருந்தது.
    ஒருவன் காவலாளியிடம்
    நான்கு ரூபாய்க்கு
    பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

    அன்றிரவும் நாங்கள்
    தூங்கவில்லை.
    கடவுளும் அன்று
    தூங்கியிருக்கமாட்டார்.


&lt;/span&gt;        
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-115289661887021647?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/115289661887021647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=115289661887021647' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/115289661887021647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/115289661887021647'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/07/3.html' title='கவித்தூரிகை 3'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-115236646202023823</id><published>2006-07-08T06:40:00.000-07:00</published><updated>2006-07-14T09:58:44.010-07:00</updated><title type='text'>பேருந்தின் சுவாரசியங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/india-chennai018.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/india-chennai018.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;


பயணங்கள் எப்பொதுமே சுவையானவையாக சிலரால், மிகச் சிலரால் அறியப்படுகிறது. எனக்குப் பயணங்கள் பெரிதாக ருசிப்பதில்லை. அவற்றை வெறுப்பதும் இல்லை. வாழ்கையில் பல விஷயங்கள் எனக்கு அப்படித்தான். பயணங்கள் பலரின் ( கவனிக்க: பணமும் நேரமும் உள்ள பலரின்) பொழுதுபோக்காக இருக்கிறது. குறிப்பாக ரயில் பயணங்கள். ரயிலைப் பற்றியும் ரயில் பயணங்களைப் பற்றியும் பிறிதொரு முறை பேசலாம். இப்போது இன்று நான் கதையளக்கப் போவது பேருந்துப் பயணங்களைப் பற்றி....

பெருநகரங்களில் பேருந்து பயணங்கள் அவ்வளவு சுவாரசியமானதாக இருக்குமா என்று தெரியவில்லை... நான் சிறு வயதில் இருந்தது டவுனில். அங்கிருந்து என் பள்ளிக்கூடத்திற்கு தினமும் மூன்று மணி நேரம் வீதம் எட்டு வருடங்கள் பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன்! பேருந்தின் அதிர்வு அதன் இஞ்ஜின் சத்தம் அதன் திடீர் நிறுத்தஙள் எல்லாம் எனக்கு அத்துப்படி.

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து செல்வதால் பள்ளி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் ஒரு extended வகுப்பு போல இருந்தன அந்த பயணங்கள். பேருந்து கூட்டமாக வந்தாலும் சலிப்பாக இருக்காது. உண்மையில் கூட்டம் அதிகம் இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. கூட்டம் இல்லையேல் நிம்மதியாக தூங்கலாம். எப்படியிருந்தாலும் சந்தோஷமே.

பேருந்தின் முதல் சுவாரசியம் சீட் பிடித்தல். அது மிகப்பெரிய கலை. முதலில் உட்கார்ந்துகொண்டு வருபவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். இறங்கப் போகிறவர் யார் என்பதை பெரும்பாலும் அவர்களின் முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். சில முகங்கள் சலனமே காட்டாமல் தேமே என்று இருக்கும். பெரும்பாலான முகங்களில் ஒரு அவஸ்தை தெரியும். இந்த கூட்டத்தில் எப்படி இறங்குவது என்ற அவஸ்தை தான். பெரும்பாலான உலக மகா பொதுஜனங்கள் இறங்கும் இடத்திற்கு முன்னரே ஒரு மாதிரி நெளிய ஆரம்பிப்பார்கள். ஆண்கள் தலைவாரிக்கொள்வது பெல்ட் சரிசெய்வது போன்றவற்றை செய்வார்கள். பெண்களாயின் கொண்டுவந்த பைகளை சரிபார்த்தல் சீட்டுக்கு அடியில் இருக்கும் பைகளை பெரும் சாகசம் செய்து எடுத்தல் போன்றவற்றை செய்வர். இதை எல்லாம் கவனித்து நாங்கள் அந்த குறிப்பிட்ட சீட்டை ரவுண்டு கட்டுவோம். அதைப் பிடித்த பிறகு மற்ற பயணிகளின் கனல் பார்வை பரிசாய்க் கிடைக்கும். இன்னும் சிலர் இலவச இணைப்பாக அன்பாக "பாராட்டுவார்கள்". எங்களை மட்டுமல்ல எங்கள் பள்ளியை எங்களுக்கு இலவச bus pass வழங்கிய government, எங்களை ஏற்றிய கண்டக்டர் எங்கள் "மாணவ சமுதாயம்" ("இந்த காலத்து பசங்களுக்கு sir..." என்று யாராவது ஆரம்பிப்பார்கள்) என சகலமானவருக்கும் இலவச அர்ச்சனை கிடைக்கும்.

அடுத்த சுவாரசியம் எங்கள் பொக்கிஷமான school bag. மெட்ரிகுலேஷனில் படித்ததால் அதிபுத்திசாலிகளாகிய எங்களுக்கு கொஞ்சம் நிறையவே புத்தகங்கள். அந்த பெரிய bag-ஒடு கூட்டமான பேருந்தில் நாங்கள் ஏறினாலே அனைவருக்கும் வயிறு கலங்கி விடும். அந்த மாபெரும் பையால் அனைவரையும் ஒரு இடி!. தொப்பை இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். பையும் அவர்களின் தொப்பையும் ஒரு மல்யுத்தமே நடத்தும். மல்யுத்ததின் வெற்றி தோல்வியைப் பொறுத்து மீண்டும் கண்டக்டர் government மாணவ சமுதாயம் என அர்ச்சனை தொடங்கும்.

அடுத்தது சீட் கேட்டு தொல்லை பண்ணுபவர்கள். வயதானவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அப்படி யாரவது ஏறினால் பெரும்பாலும் யாராவது volunteer-ஆக இடம் கொடுத்துவிடுவார்கள். இந்த சீட் கேட்டு தொல்லை பண்ணும் கேடகரியில் எனக்கு அலர்ஜியே நடுவயதைச் சேர்ந்த குண்டுப் பெண்மணிகள் தான். நாங்கள் எவ்வளவு "தெம்பானவர்கள்" "சுறுசுறுப்பானவர்கள்" என்பதையெல்லாம் சொல்லி அறுப்பார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள அதே வயது ஆண்களும் ஜால்ரா தட்டுவார்கள். வேறொன்றுமில்லை.அவர்களுக்கு சீட் கிடைக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல். சில நேரங்களில் அவர்களின் அறுவையும் புலம்பலும் தாள மாட்டாமலே இடம் கொடுத்துவிடுவோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களின் பிரச்சினை புரிந்து அவர்கள் கேட்காமலே இடம் கொடுத்துவிடுவொம். இருந்தும் ஒரு சலிப்பு இருந்து கொண்டேயிருக்கும். இவர்களை யார் இவ்வளவு குண்டாக சொன்னதென்று.

எத்தனை சுவாரசியஙள் இருந்தாலும் ultimate சுவாரசியம் பேருந்துக்கே உரித்தான அந்த அறுவை மன்னர்கள் தான். பெரும்பாலும் நடுவயதைத் தாண்டியிருப்பவராக இருப்பார்கள். simple-ஆக ஒரு வெள்ளை சட்டை ஒரு dark pant. Files, tiffin box, waterbottle முதற்கொண்டு வேலைக்கு தேவையான அனைத்தையும் வைத்துக்கொள்ள வசதியாய் ஒரு bag . இவர்களுக்கு அரசியல் பேச சமவயது ஆட்கள் கிடைத்தால் நாம் escape! அதுவும் எதிர்கட்சியை சேர்ந்தவர் கிடைக்கவேண்டும். இல்லையேல் நாம் தான் அவர்களின் அன்றைய போணி. நம்மிடம் பேச இவர்களுக்கு நிறைய விஷயம் இருக்கும். இங்கிலிஷ் மீடியம் மாணவன் என்பதால் சிலர் ஆங்கிலத்தில் பேசி கொல்வார்கள்("in 1966 i was"). நான் பெரும்பாலும் "ஒரு-அப்படியா-சந்தோஷம்" சிரிப்பு சிரித்து சமாளிப்பேன். இதில் சிலர் மாணவிகளிடம் வெகு பாசத்தோடு பழகுவார்கள். ("பாப்பா" இவர்களுக்கு மிகவும் பிடித்த சொல்!!) அந்த அறுவை மன்னர் நம் பள்ளியில் படித்து "உருப்பட்டவராய்" இருந்தால் நாம் காலி. அவர்களின் அன்றைய aothograph show-க்கு நாம் தான் prime audience! இந்த category-யில வேலைக்குப் போகாத கிராமத்து தாத்தாக்களும் உண்டு. அவர்களின் நோக்கமெல்லாம் இந்த மெட்ரிகுலேஷன் கல்வி முறையின் complete summary-யை நம்மிடம் கறப்பது தான். அவர்களுக்கு புரியும்படியாக சொல்வது என்பது மகா கடினம். இந்த category-யில பெண்கள் அறவே இல்லை என்று தான் நினைக்கிறேன். May be மேற்சொன்னவர்கள் இப்படி வீட்டிற்க்கு வெளியே ரம்பமானதிற்கு காரணமே அந்தந்த வீட்டு பெண்கள்தானோ என்னவோ. :-)

அடுத்தது பேருந்தில் தூங்கிவழியும் கும்பக்கர்ணர்கள். நிஜமாகவே கொடுத்து வைத்த ஆன்மாக்கள். நம்மூர் பேருந்தில் கூட இவர்களுக்கு தூக்கம் வருகிறது அல்லவா அதனால் நிச்சயம் கொடுத்து வைத்த ஆன்மாக்கள் தான். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நம் தோளில் சாய்ந்தபடி கனவு காண்பார்கள். முதலில் எல்லாம் எனக்கு அப்படி தோளில் விழுந்தால் என்ன செய்வது என்றே தெரியாமல் முழிப்பேன். இப்பொதெல்லாம் செம தெனாவட்டாக நடந்து கொள்கிறேன். அவர்கள் நம் தோளில் விழுந்து நாம் அவர்களை எழுப்பினால் ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பாருங்கள்.... ஆஹா!

இப்படி பல சுவாரசியஙள்.... பல வருடஙள் இதனை ரசித்திருக்கிறேன்.... ஆனால் கல்லூரிக்கு வந்த பிறகு அதெல்லாம் போச்சு.... இப்பொது விடுமுறைக்கு வீட்டுக்கு போகும் போதெல்லாம் அதே வழியில் பேருந்தில் செல்வேன்... சில சமயம் அதே driver conductor -களை கூட பார்ப்பதுண்டு! அதே போன்ற மனிதர்கள்... ஆனால் இந்த school மாணவர்கள் ஏறுகிறார்கள் பாருங்கள்... பெரிய bag-உம் lunch bag-உம்.... அப்படியே நம்மை இடித்து கொண்டு செல்வார்கள்... சே சே சே... சரியான இம்சை... என்ன சொல்கிறீர்கள்??!!!! ஹா ஹா ஹா!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-115236646202023823?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/115236646202023823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=115236646202023823' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/115236646202023823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/115236646202023823'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/07/blog-post_08.html' title='பேருந்தின் சுவாரசியங்கள்'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114677144444873486</id><published>2006-05-04T12:25:00.000-07:00</published><updated>2006-05-04T13:19:42.936-07:00</updated><title type='text'>வாழ்க்கையை எழுதுதல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/arundhati_roy.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/arundhati_roy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;






















&lt;span style="color:#000000;"&gt;நாவல்களை நேரத்தைப் போக்கும் கருவியாக பார்த்திருந்த காலங்களில் மர்ம நாவல்களும் துப்பறியும் நாவல்களும் என் விருப்பத்துக்குரியவையாய் இருந்தன. துப்பறியும் நாவல்களே சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். பிறகு 'AND THEN THERE WERE NONE' மற்றும் 'THE DA VINCI CODE' ஆகிய நாவல்களைப் படித்த பின்னர் இவற்றைவிட சிறப்பான துப்பறியும் நாவல்களே இல்லை என்று முடிவு செய்தேன். பின்னர் இந்த எழுத்தாளர்கள் இன்னும் என்னத்தை தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது.

அந்த வியப்பைத் தீர்த்துக் கொள்ள துப்பறியும் களம் அல்லாத வேறு களத்தில் இயங்கும் நாவல்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது எனக்கு படிக்க வாய்த்தது JEFFREY ARCHERன் SONS OF FORTUNE. பாதி நாவலைப் படிக்கும் முன்னரே போதுமடா சாமி என்று ஆகிவிட்டது. அதன் பின்னர் இது போன்று நாவல்களைப் படிக்கவே கூடாது என்று எண்ணினேன். பிறகு ஒரு நண்பனின் பரிந்துரையின் பேரில் ஒரு கடைசி முயற்சியாக ARUNTHATI ROYன் THE GOD OF SMALL THINGS நாவலைப் படிக்கத் தொடங்கினேன். என் ஒட்டுமொத்த எண்ணத்தையும் மாற்றிவிட்டது அந்த முயற்சி.


&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;1997ம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற நாவல் அது. இந்த நாவலுக்கு தராமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;கடவுளின் மாநிலம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நடைபெறுகிறது இந்த கதை. கொஞ்சம் கொஞ்சமாய் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு syrian கிறித்துவ குடும்பத்தின் கதை இது. அந்த குடும்பத்தில் பிறந்த இரட்டைக்குழந்தகளின் பார்வையில் பெரும்பாலான கதை சொல்லபடுகிறது. ரேஹல் மற்றும் எஸ்தா அந்த இரட்டையர்கள். அந்த குடும்பத்தில் அனைவரும் விசித்திரமான விதியினால் ஒவ்வொரு விதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒவ்வொருவரின் கதையும் நம்மை பாதிக்கும் அளவு உண்மையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;கடவுளின் மாநிலம் என்பதாலோ என்னவோ சமூகத்தின் சில தட்டு மக்கள் தங்கள் உயிரையும் உரிமையையும் பாதுகாக்க எப்போதும் கடவுளை வேண்டியபடி இருக்கிறார்கள். அவர்களை மேல்தட்டு மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை முகத்தில் அறைவது போல் சொல்கிறது நாவல்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;கதையின் மத்தியில் நிகழும் ஒரு மரணமும் அதை தொடர்ந்து நிகழும் ஒரு கொலையும் தான் கதையின் அடிநாதம். அந்த மரணங்களுக்குப் பிறகு கதையின் போக்கு என்ன? இது தான் நாவல். இதை ராய் சொன்ன விதம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். கதை பாதியில் துவங்கி பின்னோக்கியும் முன்னோக்கியும் ஒரே நேரத்தில் ஒரே சீராய் செல்கிறது. இவ்வாறு தெளிவாய் கதை சொல்ல அசாத்திய திறமை வேண்டும். அது ராயிடம் நிறையவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த கதையில் யாரும் நல்லவர் என வெள்ளை நிறம் கொண்டவர்களும் கிடையாது தீயவர் என கறுப்பு நிறம் கொண்டவர்களும் கிடையாது. எல்லாரும் எல்லாம் கலந்த பழுப்பு நிறம் கொண்டவர்கள் தான்.அதுவும் சமூகத்தில் இருக்கும் பழுப்பு நிறம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;இரட்டை குழந்தைகளின் தாய் அம்மு. பாட்டி மாமாச்சி. சின்ன பாட்டி கொச்சம்மா. பெரியப்பா சாக்கோ. பெரியம்மா மார்க்ரெட். மார்க்ரெட்-சாக்கோ மகள் சோஃபி. இரட்டையைர்களின் பிரியமான கீழ்ச்சாதியைச் சேர்ந்த வெலுதா. இவர்கள் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணத்திற்காக நெடுநாட்கள் உங்கள் நினைவில் இருப்பார்கள். ரேஹல் தாயை பிரிந்த பின்னர் அடங்காத பெண் ஆனதற்கோ, எஸ்தா தந்தையிடம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் மொத்தமாக பேசுவதை நிறுத்திவிட்டதற்கோ, சாக்கோ மார்க்ரெட்டை விவாகரத்து செய்துவிட்ட பின்னரும் கூட அவளின் இரண்டாம் கணவன் இறக்கும் போது அவளுக்கு ஆறுதலாய் இருப்பதற்கோ, கொச்சம்மா சாக்கோவின் உடல் இச்சையைத் தீர்க்கவேண்டி திருட்டுத்தனமாய் கீழ்ச்சாதிப் பெண்களை ஏற்பாடு செய்வதற்கோ, சோஃபி எப்போதும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதற்கோ, எதற்கோ இவர்கள் உங்கள் நினைவில் நிச்சயம் நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் அம்மு, வெலுதா, ரேஹல் மற்றும் எஸ்தா. அம்மு கணவனை இழந்த பின்னர் தாய்வீட்டில் எந்த விருப்புவெறுப்புகளும் இல்லாமல் குழந்தைகளுக்காக வாழ முற்படுகிறாள். அவளின் ஒரே காதல் பொய்யாகிப் போனதால் அவளுக்குள்ளே இருக்கும் காதல் யாருக்கும் தரப்படாமல் தேங்கிப்போகிறது. அந்த தேங்கிய காதலை பெறுகிறான் வெலுதா. அங்கே சாதியை விட காதல் முக்கியமாகிறது. எனோ அதை கள்ளக்காதல் என்று சொல்ல மனம் வரவில்லை. திருமணம் பொய்த்த பின்னர் வருகிற காதல் உண்மையாய் இருப்பின் என்ன தவறு. மனத்திற்கு சாதி உண்டா என்ன? வெலுதாவையும் இழந்து எஸ்தாவை கணவனிடம் இழ்ந்து பிழைப்புக்காக ரேஹலையும் பிரிந்து பின்னர் ஒரு மூன்றாம் தர விடுதியில் இறந்து போகிறாள். அவளின் GOD OF SMALL THINGS தந்த சிறு சந்தோஷங்களை தவிர வேறு எதுவும் அந்த வாழ்க்கையில் அவள் பெற்றதாகத் தெரியவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;வெலுதா தான் அந்த GOD OF SMALL THINGS. அம்முவும் அவள் குழந்தைகளும் அந்த ஏய்மனம் வீட்டில் சுமையாக பாவிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் போது அவர்களின் சிறு சிறு சந்தோஷங்களை நிறைவேற்றும் கடவுளாக அவர்களிக்கு சிறு சிறு வரங்களைத் தரும் கடவுளாகிப் போகிறான். தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவன் மேல்சாதியைச் சேர்ந்த அம்முவுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் கடவுளாதலே வாழ்க்கையின் ரகசியமும் அதிசயமும். இதுவே நாவலின் மையக்கரு. வெலுதா அம்முவுக்கு அறிவிக்கப்படாத காதலனாகவும் ரேஹல்-எஸ்தாவுக்கு அறிவிக்கப்படாத த்ந்தையாகவும் இருந்து நெகிழவைக்கிறான். அதனால் தானோ என்னவோ அவனின் இறப்பு என்னை என்னவோ செய்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;ரேஹல்-எஸ்தாவின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அருந்ததி ராயின் sarcastic humourக்கு அவர்கள் மிகவும் பயன்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை இளவரசன் இளவரசியாக நினைத்துக் கொள்வது , வெலுதாவிடம் மிகுந்த அன்பு கொள்வது , அம்முவின் கண்டிப்பையும் மீறி அவளின் அன்பை புரிந்துகொள்வது என இயல்பாக இருக்கிறார்கள். தங்களின் தாய் கணவனில்லாமல் கஷ்டப்படுவதை கண்டு அவர்கள் வருந்தி உச்சக்கட்டமாக படம் பார்க்கச் சென்ற திரையரங்கில் கடை வைத்திருப்பவனை தங்களின் தந்தையாக இருக்க இயலுமா என்று கேட்பது ஒரே நேரத்தில் அதிர்ச்சி கொள்ளவும் வருத்தம் கொள்ளவும் கோபம் கொள்ளவும் செய்கிறது. அம்மாவை விட்டு பிரிவது ரேஹலை முற்றும் சீரழிக்கிறது. எஸ்தாவோ பேசவே மறந்து போகிறான். அம்முவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் இருவரும் சந்திக்கும் போது அன்னியர்கள் போல உணர்வது விதி. வீட்டு பரணில் இருந்து பழைய நோட்புக்கை எடுத்து ரேஹல் புரட்டுகிற இடம் ஒரு கவிதை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;அருந்ததி ராயிடம் எனக்கு பிடித்தது அவரின் நேர்மை. வாழ்க்கையை எழுதுதல் அவ்வளவு சுலபமல்ல. அம்மு-வெலுதாவின் காதல் தெய்வீகமானது காமம் இல்லாதது என்றெல்லாம் ப்ரஸ்தாபிக்காமல் அவர்களின் காதலில் கலந்த காமத்தை மெலிதாக விவரிக்கிறார். அம்மு தன் இளமை வீணாய் போவதை குளியலறைக்கண்ணாடி முன் நின்று தன் உடல் அழகை பார்த்துக்கொள்கிற காட்சி அத்தனை நிஜமாய் இருக்கிறது. இதையெல்லாம் தமிழில் எழுதினால் தமிழகத்தில் போராட்டமே வெடிக்கும். நிஜம் ஏனோ நமக்கு கசக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;அருந்ததி ராயின் மொழிநடையும் அபாரம். குழந்தைகளின் உலகத்தை உணர்ந்து எழுதியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியை விளக்கவதும் வானிலையை விளக்குவதும் கதை மாந்தரின் மனநிலையை விளக்குவதும் அத்தனை புதிது அத்தனை ரசனை.அதை விளக்குவதை விட நீங்களே படிப்பது உத்தமம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த நாவலைப் படித்த பின்னர் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏதோ நோயில் விழுந்தது போல உண்ர்ந்தேன். சோஃபி இறக்காமல் இருந்திருக்கலாம், இல்லை வெலுதா இறக்காமல் இருந்திருக்கலாம், எஸ்தா திருப்பி அனுப்பபடாமல் இருந்திருக்கலாம், அம்முவுக்கு ஒரு வாழ்க்கை அமைந்திருக்கலாம்........ இன்னும் என்னென்னவோ தோன்றியபடி இருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;கதையின் முடிவை முதலேயே சொல்லி விட்ட பிறகும் கடைசி அத்தியாயங்களில் தொண்டை அடைக்கிறது. கதையின் முடிவு அப்படியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. கடைசி அத்தியாயம் வெலுதா கொலை செய்யப்படுவதற்கு முன் நாள். ரகசியமாக சந்திக்கிறார்கள் அம்முவும் வெலுதாவும். அவர்கள் காதல் கொள்வதையும் கலப்பதையும் அத்தியாயம் விவரிக்கிறது. அம்மு கிளம்பும் போது வெலுதா அவளிடம் மீண்டும் எப்போது சந்திப்பது என்று கேட்கிறான். அம்மு திரும்பி பார்த்து "நாளை" என்கிறாள். அதோடு முடிகிறது நாவல். அங்கே முடிகிற நாவல் உங்கள் மனதில் தொடர்ந்தபடி இருக்கும். உங்களை மீண்டும் படிக்க வைக்கும். கலங்க வைக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;நாவலின் பின் அட்டையில் ஒரு எழுத்தாளர் இவ்வாறு ஒரு விமர்சனக்குறிப்பு எழுதியிருக்கிறார் ---- "இது போன்று மீண்டும் ஒரு கதை மீண்டும் சொல்லப்படாது". அது அத்தனை உண்மை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114677144444873486?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114677144444873486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114677144444873486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114677144444873486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114677144444873486'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/05/blog-post.html' title='வாழ்க்கையை எழுதுதல்'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114674314173465667</id><published>2006-05-04T04:34:00.000-07:00</published><updated>2006-05-04T13:15:22.546-07:00</updated><title type='text'>செல்லுலாய்ட் கவிதைகள் 1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/1024x768.jpg"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/1024x768.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;



















இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரு கண்கள் போல என்று சொல்வார்கள். ஆனால் இரு கண்களுமே பழுதடைந்த நிலையில் இருப்பது உண்மை. தமிழ் திரையுலகம் சற்று மாற்றம் கண்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் தொடர்ந்&lt;/span&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/Copy%20of%20amelie.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;து வெளிவரும் மசாலா மற்றும் அபத்த காதல் கதைகளுக்கு நான் முதல் எதிரி. ஆங்கில திரைப்படத்தின் பிரம்மாண்டம் எனக்கு மிகவும் அன்னியமாகப் படும். அவ்வாறு எந்த திரைப்படத்தையும் காண முடியாமல் ஒரு மதிய வேளையிலே தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த போது ZEE STUDIO தொலைக்காட்சியில் AMELIE என்ற ஃபிரென்ச் திரைப்படத்தைப் பார்த்தேன்.

அமீலி ஃப்ரான்ஸ் நாட்டில் தன் தந்தையோடு வசிக்கும் இளம்பெண். தான் உயிர் வாழ்வதை வெறும் உடல் அசைவுகளால் நிருபிப்பவள். தன் ஐம்புலன்களையும் ஆமை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல இவளும் தன்னை வெளிப்படுத்துவதே இல்லை. சிறு வயதில் நிகழ்ந்த அவள் தாயின் மரணம் அவளை இப்படி ஆக்கிவிடுகிறது. அந்த சம்பவம் அவளின் தந்தையின் மனநிலையையும் பாதித்துவிடுகிறது. அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருக்கிறது. எல்லாருடனும் பழக வேண்டும் என்ற ஆசையும் அவளுக்கு உண்டு. அவள் மிகவும் romantic ஆகவும் அவள் இருக்கிறாள். ஆனால் அவளின் கூச்சம் அவளை எதுவும் செய்ய அனுமதிப்பதில்லை. அவளின் introvert தன்மை அவளை
ஒரு ஆக்டோபஸ் போல சூழ்ந்து கொள்கிறது.


திரைப்படம் அவளின் இருபது வயதில் துவங்குகிறது. ஒரு காஃபி ஷாப்பில் வேலை செய்தபடி தன் மனநிலை சரியில்லாத தந்தையை கவனித்து கொண்டிருக்கிறாள். புதிதாக குடியேறும் ஒரு அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக அவள் உதவி செய்வதை மெதுவாக படம் சொல்கிறது. துணையில்லாமல் இருக்கிற ஓவியம் வரையும் கிழவருக்கு ஆறுதலாக இருப்பது, கணவனை போரில் இழந்தபிறகும் அதை நம்பமறுக்கும் மனைவிக்கு கணவனைப் போல கடிதம் எழுதுவது (அதுவும் கணவனின் பழைய கடிதங்களை திருடி அதிலுள்ள வார்த்தைகளை வெட்டி ஒட்டி நகல் எடுத்து!), தன்னுடன் பணிபுரியும் பெண்ணின் காதலை அந்த ஜோடிக்கே தெரியாமல் சேர்த்து வைப்பது, வீட்டு வாசலில் உள்ள கடையில் எப்பொதும் திட்டுவாங்கும் வேலைக்காரப் பையனுக்கு உதவுதல்....... இன்னும் எத்தனை......... இவை அனைத்தும் ஒரு கடமை போல அவள் செய்கிறாள்..... ஒரு திருட்டை போல யாருக்கும் தெரியாமல் செய்கிறாள்..... அவளின் புத்திசாலித்தனம் நிச்சயம் உங்களை வியக்க வைக்கும்.


இவ்வளவு உதவிகள் செய்பவளுக்கு தனக்கு தானே உதவிகள் செய்து கொள்ளத் தெரியவில்லை. தன்னுடைய காதலைச் சொல்லதெரியாமல் போகிறது. அவள் காதல் ஜெயித்ததா இல்லையா என்பது இப்படத்தின் முடிவு.


&lt;/span&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/6.jpg"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/6.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt; இப்படத்தின் பெரும் பலமே அதன் கதாபாத்திரங்கள் தான். அமீலி மிக எளிமையாக சொல்லப் பட்ட ஒரு கடினமான கதாபாத்திரம். அவளின் காதலனாக வருகிற நினோ(nino) ஒரு விசித்திரமான பொழுதுபோக்கு உடையவன்.

ஃபிரான்ஸில் ரயில் நிலையம் , ம்யுசியம் போன்ற பொது இடங்களில் தானியங்கி photo shops இருக்கும். நாணயத்தை போட்டு தொலைபேசுவது போல அங்கே புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அப்படி எடுக்கும் போது சரியாக வராத நிழல்படங்கள் அங்குள்ள குப்பைத்தொட்டியில் போடப்படும் அல்லவா? அதில் வித்தியாசமான முகங்களை மட்டும் சேகரிக்கும் பழக்கம் உடையவன். அவ்வாறு சேகரிக்கும் போது ஒரு முகம் பெரும்பாலான் photo shopகளிலும் photoக்களிலும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள் நாயகனும் அவனுடைய ஆல்பத்தை ரகசியமாக பார்க்கும் அமீலியும். அந்த முகத்துக்கு சொந்தக்காரனை கண்டுபிடிக்கும் ஆசை நினோவுக்கு இருப்பதை அறிந்து அதையும் அவனுக்கே தெரியாமல் உதவுகிறாள் அமீலி. அந்த முகம் யாருடையது என்பது மிகவும் ரசனையான கற்பனை.

முழுப்படமுமே ஒரு தெளிவான அழகியலுடன் அமைந்திருப்பது மிக ஆச்சர்யம். அமீலியின் புது வீட்டில் சுவற்றின் அடி ஓட்டையில் ஒரு pencil box இருப்பதும் அது அங்கு முன்னமே வசித்த ஒரு வயதானவரின் பால்யகால பொக்கிஷம் என்பதை கண்டுபிடித்து அதை அவரிடமே அவருக்கு தெரியாமல் கொண்டு சேர்க்கும் காட்சியில் அசாத்திய அழகும் அறிவும் வெளிப்படுகிறது. பின்னர் பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க உதவும் காட்சி , ( இதைத்தான் கஜினி திரைப்படத்தில் அமெச்சூராக காப்பி அடித்திருந்தார்கள் ), நினோவை தன்னை தேடி அமீலி அலைய வைக்கும் காட்சி என பல காட்சிகள் visual treatஆக அமைந்திருந்தன. அமீலி சோகமாக இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் எதோ ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் எல்லொரும் அமீலிக்காக வருந்திப்பேசுவது போல அவளுக்கு தோன்றுவதும் அவள் உற்சாகமாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியின் சாகச சண்டைக்காட்சியில் அவளே நடிப்பது போல உணர்வதும் ஒரு introvertன் மனநிலையை படம்பிடிக்கும் அசத்தலான காட்சிகள்.


சதா ஓவியம் வரைகிற அந்த தாத்தாவின் அனைத்து ஓவியங்களிலும் ஒரு பெண் தனிமையில் இருப்பது போன்று அவரே வரைந்து விட்டு பின்னர் அது யார், ஏன் இப்படி வரைந்தோம் என அமீலீயிடம் அவரே ஆச்சர்யப்படுகிறார். பின்னர் தான் வரையும் அந்த பெண் அமீலீ தான் என அவர் உணர்ந்து அமீலீயிடம் எதோ ரகசியம் இருக்கிறது என்று அவளை கண்காணிக்கிறார். பின் அவளைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்கிறார். அவள் காதலை சேர்த்துவைக்க அவர் என்ன செய்கிறார்
என்பது அழகான க்ளைமாக்ஸ்.

படத்திற்க்கு கூடுதல் பலம் இசையும் ஒளிப்பதிவும். கேமராவில் வண்ணங்களைத் தெளித்தது போல படம் colorfulஆக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மனதில் அப்படியே பதிகிறது. ஒரு விதமான jazz இசை படம் நெடுக வழிந்துகொண்டேயிருக்கும். இப்பொது கூட நினைவு இருக்கிறது அந்த இசை.


அமீலீயாக நடித்திருப்பவர் audrey tautou ( தற்போது da vinci code திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ). கதாபாத்திரத்திக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரின் அமைதியான சிரிப்பு பெரிய plus. தொலைக்காட்சியைப் பார்த்து அவர் அழுவதும் அவரின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையும் போது அவரின் கண்களில் தெரிகிற அந்த மின்னலும் என் நினைவில் இன்னும் இருக்கின்றன. நினோவாக நடித்திருப்பவர் mathiu. ஃபிரான்ஸின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் jean-pierre இப்படத்தை இயக்கயிருக்கிறார். 2001ல் வெளிவந்த இப்படம் 5 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு - &lt;/span&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0211915/"&gt;&lt;span style="color:#000000;"&gt;http://www.imdb.com/title/tt0211915/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;

படம் முடிந்த பின்னர் எனக்கு எதோ கனவு கண்டது போல இருந்தது. அந்த ஃபிரான்ஸ் சாலைகள், அந்த ஓவியத் தாத்தா, அமீலி, நினோ , காமிராவின் துல்லியம், அந்த jazz இசை.. எல்லாமும் அப்படியே நினைவில் இருக்கிறது. Le,Fabuleux destin d'Amélie Poulain என்ற இந்த படம் போன்று தமிழில் ஒரு படம் வராதா என்று ஏக்கமாக உள்ளது.


பிரம்மாண்டமான அரங்குகள் இல்லை, வில்லன் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை. திரைப்படம் போலவே தெரியவில்லை. யாரோ இயக்கி யாரோ நடித்து வெட்டி ஒட்டி செய்தது போன்று ஒரு உணர்வே இல்லை. ஒரு வாழ்க்கையை வாழ்பவர்க்கு தெரியாமல் படம் பிடித்தது போலே இருந்தது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114674314173465667?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114674314173465667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114674314173465667' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114674314173465667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114674314173465667'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/05/1.html' title='செல்லுலாய்ட் கவிதைகள் 1'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114317619987077641</id><published>2006-03-23T20:52:00.000-08:00</published><updated>2006-05-04T13:03:06.156-07:00</updated><title type='text'>என்றும் இளைய(ராஜா) இசை - 1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/mohan6%20_1__0001.jpg"&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/mohan6%20_1__0001.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:verdana;font-size:100%;color:#000000;"&gt;















&lt;/span&gt;
&lt;span style="font-family:verdana;font-size:100%;color:#000000;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-family:verdana;font-size:100%;color:#000000;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-family:verdana;font-size:100%;color:#000000;"&gt;இந்த வலைப்பூவில் (blog) நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை தமிழும் இளையராஜா அவர்களின் இசையும் தான். தலைமுறைகளைத் தாண்டும் இசையைத் தரக்கூடிய இசையமைப்பாளர்களில் இசைஞானி முதன்மையானவர். இசைக்கருவிகளை உயிர்ப்பித்தல் அவருக்கு மட்டுமே சாத்தியம். இந்த வலைப்பூவில் அவரின் இசையைப்பற்றியும் அதனால் எனக்குள் உண்டான பாதிப்புகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது என் ஆசை.

எனக்கு இளையராஜாவின் அறிமுகம் சிறு வயதிலேயே கிடைத்துவிட்டது. ஒரு பத்து வயது என்று வைத்துக்கொள்ளலாம்.(இப்பொது எனக்கு வயது 21). என் அக்கா இசைஞானியின் விசிறி. அவள் சதா முணுமுணுக்கும் பாடல்களும் வானொலியும் விரும்பிக் கேட்கும் பாடல்களும் அவரின் பாடல்களாக இருந்தன. அப்போது அவரின் இசை என்னைக் கவரவில்லை. அதில் எனக்கு வருத்தமே.இப்பொது நான் அவரின் மிகப்பெரிய விசிறி. இந்த மாற்றம் நடைபெற்ற விதத்தையும் இங்கே தொடர்ந்து பதிவு செய்யப் போகிறேன். நான் இசை பயிலவில்லை. அதனால் நிச்சயம் இசை அறியாத பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கலாம் என நினைக்கிறேன்.

என் பத்து வயதிலே அவரின் இசை என்னை கவராத போதிலும் அவரின் சில பாடல்களை நான் ரசித்தேன்.அவற்றில் முதன்மையானது மௌன ராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' என்ற பாடல். அந்த பாடலை ஆயிரம் முறை கேட்ட பின்பும் என்னை அது கிறங்கடிப்பது தான் ஆச்சரியமே. அந்த ஆச்சரியமே இளையராஜாவை எனக்கு அடையாளம் காட்டியது.

நடிகர் மோகனுக்கும் இளையராஜாவுக்கும் எதோ ஒரு ராசி.... எத்தனை பாடல்கள்.... நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. அதே போல் மணிரத்னத்திற்கும் இசைஞானி அற்புதமான பாடல்களை தந்துள்ளார். அதில் என்னுடைய அபிமான பாடல் இது தான்.
இந்த பாடல் திரைப்படத்தில் பாதிப்பாதியாக முன்று முறை ஒலிக்கும். தம்பதிகள் விவகாரத்துக்கு விண்ணப்பம் செய்துவிட்டு திரும்பும் போது.... மனைவியின் அன்பு சிறிதாய் வெளிப்படும் போது.... பின்னர் இருவரும் நன்பர்களை போல தங்களை மறந்து வெளியே செல்லும் போது..... இம்மூன்று முறையும் இப்பாடல் மிகச்சரியாக அந்த உணர்வைத் தரும்.

இந்த பாடலின் தொடக்கத்தில் எஸ்.பி.பி தன்னையே மறந்து பாடுவார்.... முதல் முறை கணவனின் நெஞ்சமும் பின்னர் மனைவியின் நெஞ்சமும் புண்படும் போது அதை ராஜா இசையாக மொழிப்பெயர்த்த விதமும் அதை எஸ்.பி.பி தந்த விதமும் அபாரம்.

இந்த பாடலின் இடையில் ஒலிக்கும் இசையில்(BGM) ட்ரம்பெட்டும் (trumpet) புல்லாங்குழலும் சேர்ந்து விளையாடும். மேற்கத்திய இசையை நம் ரசனைக்கு எற்ற வண்ணம் தருவதில் ராஜா ராஜா தான் என்பதை நிருபிக்க இது ஒரு சிறந்த பாடல். இந்த பாடல் திரைப்படத்தில் மலரும் இடம் இருவருக்கும் இடையே உள்ள வெற்றிடம் மெதுவாய் நிரம்பும் நேரம். இந்த மெட்டும் அதற்க்கேற்றார் போல் சுகத்திற்கும் சோகத்திற்க்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியில் உலவும். ஒரு உறவை தொடங்க தேவைப்படும் ஒரு ஆர்வம் இந்த பாடல் முழுவதும் வெளிப்படும்.

இத்தனை அழகான மெட்டை கொஞ்சமும் சிதைக்காமல் வாலி வார்த்தைகளை செதுக்கியிருப்பார். ஆரம்ப வரியே அத்தனை கவித்துவம். திருமணம் ஆனபின்னும் வாழ்க்கையைத் துவக்க மறுக்கும் பெண்ணைப் பார்த்து ---- ' பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்' என்று கேட்பது வாலியால் மட்டுமே முடியும். மேலும் இந்த பாடலை அழகாய் திரையில் கொண்டு வந்து எளிமையான காட்சிகளால் நம் நினைவில் நிற்கும்படி செய்திருப்பார்கள்.

ஏதோ ஒரு அழகான நொடியில் அமர்ந்து தன் ஆர்மோனியத்தில் ஒரு கணவன் மனைவியின் உண்ர்வுகளை ராஜா இசைத்தது பதினைந்து வருடங்கள் கழித்து என்னை எழுத வைத்திருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை காதிகளில் வழியும் போதும் அதே இனிய உணர்வுகளைத் தருகிறது. காற்றலையில் ஒளிந்திருக்கிற இந்த இசை போல இந்த இசையினுள் எங்கும் ஒளிந்திருக்கிறார் ராஜா என்கிற அந்த மகாகலைஞன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114317619987077641?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114317619987077641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114317619987077641' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114317619987077641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114317619987077641'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/03/1.html' title='என்றும் இளைய(ராஜா) இசை - 1'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114209448307839073</id><published>2006-03-11T07:32:00.000-08:00</published><updated>2006-05-04T12:56:48.810-07:00</updated><title type='text'>புரட்சி ஏற்படுத்திய கதை</title><content type='html'>&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயபாஸ்கரன் எங்கள் கல்லூரி விழா ஒன்றிற்கு தலைமையேற்க வந்திருந்தார். அப்போது எழுத்தின் வலிமையை விளக்க ஒரு கதை சொன்னார். அதை அப்படியே தந்திருக்கிறேன்.

அது ஒரு கொடுங்கோல் அதிகாரி ஆட்சி புரிந்து கொண்டிருந்த நாடு. ஹிட்லெர் போல என்று வைத்துக்கொள்ளலாம். அவன் ஒரு நாள் ஒரு நாடகம் பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சேவை செய்ய அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தான் ஒரு சிப்பாய், நமது கதாநாயகன். திடீரென சிப்பாய்க்கு தும்மல் வந்துவிட சத்தமாய் தும்முகிறான். அதிகாரி அவனை திரும்பி முறைத்து பார்த்துவிட்டு தொடர்ந்து நாடகம் பார்க்கிறான். சிப்பாய்க்கோ கதி கலங்கிவிடுகிறது. நமக்கு சிரச்சேதமா தூக்கா என்று பயப்படுகிறான். உடனே அதிகாரியை தோள் தொட்டு அழைத்து "அய்யா! என்னை மன்னியுங்கள்! தெரியாமல் தும்மிவிட்டேன். அடக்க முடியவில்லை." என்றான். மீண்டும் அந்த அதிகாரி அவனை அமைதியாய் முறைத்து பார்த்துவிட்டு நாடகத்தை கவனித்தான்.

சிப்பாய்க்கு பயம் மேலிட்டுவிட்டது. நாடகம் முடியும் வரை பயத்தில் நடுங்கினான். நாடகம் முடிந்து அந்த அதிகாரி காரில் ஏறும் போது அவருடைய காலில் பொத்தென விழுந்தான். மீண்டும் அதே போல் மன்னிப்பு கேட்டான். அதிகாரியோ இன்னும் சற்று கடுமையாய் முறைத்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

உடனே சிப்பாய் வீட்டுக்கு ஒடினான். மனைவியிடம் அனைத்தையும் சொல்லி தனக்கு சாவு நிச்சயம் என்று புலம்பினான். எந்நேரமும் அரசு சார்பாக வீரர்கள் வந்து அவனுக்கான தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று நடுங்கினான். மனைவியோ, "அதிகாரி நினைத்திருந்தால் உன்னை அங்கேயே சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை. அவன் உன்னை மன்னித்துவிட்டான். வீணாய் பயந்து சாகதே!" என்றாள். இவனோ சமாதானமடையவில்லை. அடுத்து நாள் அந்த அதிகாரியின் வீட்டிற்கே சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தான். மனைவி சொல்ல சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த அதிகாரியின் வீட்டிற்கு சென்றான்.

&lt;/span&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;அந்த வீட்டின் காவாலாளி இவனை அந்த அதிகாலையில் விட மறுத்தான். இவனோ, "நான் தும்மியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றான். காவலாளி இது எதோ தனக்கு தெரியாத அதிகாரியின் ரகசியத்தின் புனைப்பெயர் என நினைத்தான். உடனே சிப்பாயை உள்ளே விட்டான்.
நமது கதாநாயகன் அதிகாரியின் படுக்கையறை எங்கே என்று விசாரித்து நேரே அந்த அறையின் கதவை சென்று தட்டினான். தூங்கிகொண்டிருந்த அதிகாரி பதறி எழுந்தான். நம் அறை இந்த நேரத்தில் தட்டப்படுகிறதெனில் ஏதோ உயர் அதிகாரியின் உத்தரவோ கலவரமோ போர் அபாயமோ என்று குழம்பி தன் அரசு சீருடையை அணிந்து துப்பாக்கியை எடுத்துகொண்டு கதவைத் திறந்தான்.

&lt;/span&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;அங்கே சிப்பாய் நின்று கொண்டு,"அய்யா தெரியாமல் அன்று தும்மிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்" என்றான். கடுப்பான அதிகாரி அவனிடம், "இன்னொரு முறை உன்னை எங்காவது பார்த்தேன் , அங்கேயே சுட்டு கொல்வேன்!" என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று சாத்திவிட்டான்.
சிப்பாய் அங்கெயே உறைந்து விட்டான். அதிகாரி தனக்கு சாவு மணி அடித்துவிட்டதாக நினைத்தான். வீட்டிற்கு சென்று அமைதியாய் படுத்துகொண்டான்.

மறுநாள் காலை அவன் மனைவி அவனை எழுப்பும்போது அவன் உடல் சில்லென்று இருந்தது. அவன் பயத்தில் உறைந்து தூக்கத்திலேயே இறந்து போனான்.

இக்கதை பெரும் எழுச்சியை கிளறிவிட்டதாம். அந்த சிப்பாய் மேல் எந்த தவறும் இல்லை. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை அவன் உயிரை குடித்துவிட்டது. இக்கதை அந்த அடக்குமுறைக்கெதிராக மக்களை திருப்பிவிட்டதாம். மக்கள் புரட்சி அந்த நாட்டில் அடக்குமுறையை ஆட்சியாளர்களை தூக்கியெரிந்த்தாம். அத்தகைய வலிமை எழுத்துக்கு உண்டு.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114209448307839073?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114209448307839073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114209448307839073' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114209448307839073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114209448307839073'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/03/blog-post.html' title='புரட்சி ஏற்படுத்திய கதை'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114155096284815570</id><published>2006-03-05T01:25:00.000-08:00</published><updated>2006-05-04T13:02:55.786-07:00</updated><title type='text'>கவித்தூரிகை 2</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/a.2.jpg"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/a.2.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000000;"&gt;
&lt;/span&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/a.1.jpg"&gt;&lt;/a&gt;

&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;காற்றில் கரையும் கானங்கள்&lt;/span&gt;

பார்வையற்றவர் ஒருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்
சில்லறைத்தட்டை நீட்டியபடி
யாருமில்லாத ரயில் பெட்டியில்!


-அரவிந்தன் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114155096284815570?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114155096284815570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114155096284815570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114155096284815570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114155096284815570'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/03/2_114155096284815570.html' title='கவித்தூரிகை 2'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114113534586627498</id><published>2006-02-28T05:51:00.000-08:00</published><updated>2006-05-04T13:02:39.626-07:00</updated><title type='text'>கவித்தூரிகை 1</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4720/2360/1600/Silence.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4720/2360/320/Silence.jpg" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சப்தத்தில் பூக்கும் மௌனங்கள்&lt;/span&gt;

என்னைச் சுற்றிய
கூச்சல்களுக்கு நன்றி
என் மௌனத்தை நான்
அறிந்துகொண்டேண்.


&lt;span style="font-size:130%;"&gt;-அரவிந்தன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114113534586627498?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114113534586627498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114113534586627498' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114113534586627498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114113534586627498'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/02/1.html' title='கவித்தூரிகை 1'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114113208651884798</id><published>2006-02-28T05:03:00.000-08:00</published><updated>2006-02-28T05:51:55.156-08:00</updated><title type='text'>அட!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அட! தமிழில் அழகாக டைப் செய்ய முடிகிறதே!!&lt;/span&gt;
&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-size:85%;"&gt;நீங்கள் பார்க்கும் இந்த வாக்கியங்கள் எப்படி உருவானது என்பதை அறிய.... &lt;/span&gt;
&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;

&lt;a href="http://www.jaffnalibrary.de/tools/Unicode.htm"&gt;http://www.jaffnalibrary.de/tools/Unicode.htm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114113208651884798?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114113208651884798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114113208651884798' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114113208651884798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114113208651884798'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/02/blog-post.html' title='அட!'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23099999.post-114104274045679706</id><published>2006-02-27T04:17:00.000-08:00</published><updated>2006-03-11T08:35:11.156-08:00</updated><title type='text'>வணக்கம்!</title><content type='html'>இது தூறலின் தொடக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23099999-114104274045679706?l=sirumazai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirumazai.blogspot.com/feeds/114104274045679706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23099999&amp;postID=114104274045679706' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114104274045679706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23099999/posts/default/114104274045679706'/><link rel='alternate' type='text/html' href='http://sirumazai.blogspot.com/2006/02/blog-post_27.html' title='வணக்கம்!'/><author><name>Aravind</name><uri>http://www.blogger.com/profile/02549339743422163764</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
